சேலத்தில் மழைக்கு 2 பேர் பலி
சேலம்:
சேலத்தில் பெய்த கடும் மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி உட்பட இரண்டுபெண்கள் இறந்தனர்.
சேலத்தில் கடந்த ஒரு வாரகாலமாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழையால்பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடிசை வீடுகளின் சுவர்கள்மழையால் பாதிப்படைந்தன.
சேலத்தில் புத்து மாரியம்மன் கோயில் வீதியில் மூர்த்தி என்பவருக்குச் சொந்தமானவீடு உள்ளது. இந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் பெரியண்ண ஆசாரி குடியிருந்துவந்தார்.
செவ்வாய்க்கிழமை பெய்த கடும் மழையில் மூர்த்தியின் வீட்டுச் சுவர் நனைந்து இடிந்துவிழுந்தது. இந்த சுவர், பெரியண்ணன் ஆசாரியின் வீட்டிற்கும் பொதுச் சுவராகஇருந்தது.
அப்போது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பெரியண்ணன் ஆசாரியின்மனைவி மாரியம்மாள் (65) சுவர் இடிபாடுகளில் சிக்கினார். இவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்தும் காப்பாற்ற இயலவில்லை.
உடனடியாக தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புபடையினரும் முயன்று மாரியம்மாளை உயிருடன் மீட்க இயலவில்லை. அவரதுஉடலை மட்டுமே மீட்டனர்.
இதையடுத்து பெரியண்ணன் குடும்பத்திற்கு ரூ. 15 ஆயிரம் முதல்வர் நிவராணநிதியிலிருந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதே போன்று, சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் சபாபதி. இவர்தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகசுவர் இடிந்து விழுந்தது. இதில் அவரது குடும்பத்தினர் காயமடைந்தனர். ஆனால்,சபாபதியின் மகள் செல்வி (7) இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.












Click it and Unblock the Notifications