Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பளுதூக்குதலுக்கு பயிற்சி அகாதெமி அமைக்கிறார் கர்னம் மல்லேஸ்வரி

Subscribe to Oneindia Tamil

ஃபரீதாபாத் (ஹரியானா):

பளுதூக்குதலில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒருஅகாதெமியை அமைக்க உள்ளதாக கர்னம் மல்லேஸ்வரி கூறினார்.

சிட்னியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில்வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் கர்னம் மல்லேஸ்வரி.

சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்த ஒரே பதக்கம் என்பதுடன், ஒலிம்பிக்போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் அவர்படைத்தார்.

பளுதூக்குதலில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒருஅகாதெமியை அமைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கிராமப்பகுதிகளில் வசிக்கும் பளுதூக்குதலில்ஆர்வம் உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பேன் என்றார் அவர்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 70 லட்சத்துக்கும்அதிகமான பரிசுப் பணத்தை இதற்காகச் செலவிடுவேன். நிதி போதவில்லை என்றுதொழில் நிறுவனங்களிடன் நிதி உதவி பெற்று அகாதெமி அமைப்பேன்.

நம் நாட்டில் விளையாட்டை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ளமுயற்சிகளும், திட்டங்களும் போதுமானதாக இல்லை. இன்னும் அதிக ஈடுபாட்டைக்காட்டவேண்டும்.

விளையாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையான அளவில்பயன்படுத்தப்படவேண்டும். கிராமப்பகுதிகளில் விளையாட்டு முகாம்கள் நடத்திதகுதியானவர்களையும், திறமையானவர்களையும் தேர்வு செய்யவேண்டும்.

சமீப காலமாக விளையாட்டுத் துறையில் சீனா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அந்தநாட்டில் 6 வயதிலிருந்தே விளையாட்டில் பயிற்சி பெறத் தொடங்கி விடுகின்றனர்.

இந்தியாவிலும் அத்தகைய திறமையானவர்கள் இருக்கின்றனர். இந்திய அரசு சீரியமுயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் விளையாட்டில் நாமும் பிரகாசிக்கமுடியும்என்றார் கர்னம் மல்லேஸ்வரி.

சிட்னி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகஅறிவித்த கர்னம் மல்லேஸ்வரி பின்னர் அந்த முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இப்போதைக்கு வாபஸ் பெறமாட்டேன் என்று தெரிவித்துள்ள அவர் அடுத்துகாமன்வெல்த் போட்டிகள், ஆப்பிரிக்க-ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகசாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி நான் கலந்து கொள்ளும் அனைத்துப் போட்டிகளும், எனது அதிகபட்சதிறமையைக் காட்டி நிச்சயம் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்என்றார் கர்னம் மல்லேஸ்வரி.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+