தெ.ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய புதிய நிர்வாக இயக்குநராக கருப்பர் இனத் தலைவர் நியமனம்
ஜொகான்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாக இயக்குநராக ாக ஜெரால்டுமஜோலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கருப்பர் இனத்தைச் சேர்ந்தமுதல் நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இப்போது வாரியத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள அலி பாச்சர் பதவி விலகுவதைஅடுத்து அப் பதவிக்கு ஜெரால்டு மஜோலா நியமிக்கப்பட்டுள்ளார்.
2003-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறஉள்ளது. அதற்கான போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவராக அலி பாச்சர்நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்துஅவர் விலகியுள்ளார்.
வாரியத்தின் நிர்வாக இயக்குநர் பதவிக்கு திறமையுள்ள பலருடைய பெயர்கள்பரிசீலிக்கப்பட்டன. ஆனால், அப் பதவிக்கு ஜெரால்ட் மஜோலா ஏகமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றார் வாரியத் தலைவர் பெர்சி சோன்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் வீரராகவும், நிர்வாகியாகவும் பலபொறுப்புகளில் மஜோலா பணியாற்றியுள்ளார். நீண்ட காலமாக தென் ஆப்பிரிக்ககிரிக்கெட்டுடன் தொடர்பு கொண்டுள்ள அவர் வாரியத்தின் நிர்வாக இயக்குநராகநியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அது தவிர, நிறவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் சர்வதேச கிரிக்கெட்போட்டிகளில் விளையாட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்குத் தடைவிதிக்கப்பட்டது.
இத் தடை 1991-ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. முதன்முதலாக தென்ஆப்பிரிக்க அணியை தனது நாட்டுக்கு அழைத்து அதனுடன் விளையாடிய முதல் நாடுஇந்தியாதான்.
நிறவெறிக் கொள்கையைக் கடைப்பிடித்த தென் ஆப்பிரிக்காவில், அந் நாட்டுகிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக ஒரு கருப்பர் நியமிக்கப்பட்டுள்ளதும்குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவில் இரு சிறப்பு அம்பயர்கள் நியமனம்:
தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை உயர்த்தும் நோக்கில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இரு சிறப்ப அம்பயர்களையும், 3 தொழில்முறைஅம்பயர்களையும் நியமித்துள்ளது.
சிரில் மிட்ச்லே, ரூடி கோயர்ட்சன் ஆகியோர் சிறப்பு அம்பயர்களாகநியமிக்கப்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குநர் பிரையன்பாஸ்ஸோன் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications