பால்பண்ணை மோசடி: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
பால்பண்ணை நடத்த பொதுமக்களிடம் பணம் திரட்டி, 15 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இருவரைப் போலீசார்கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், கோட்டபாளையத்தைச் சேர்ந்தவர் கோபி (48), ருக்குமணி (50). மற்றும் கலாராணி. இவர்கள்"புளியம்பட்டி டைரி மில்க் புராடக்ட்ஸ் என்ற நிறுவனத்தைத் துவங்கினர்.
இதற்காக பொதுமக்களிடம் நிதி திரட்டினர். மேலும், டெபாசிட்டாகவும், பல லட்ச ரூபாய் திரட்டினர்.
பொதுமக்களிடம் பெற்ற டெபாசிட் பணத்தின் கால அளவு முதிர்வடைந்ததைத் தொடர்ந்து பணத்தை திருப்பிக்கேட்டனர். ஆனால், இவர்களால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலவில்லை.
இதையடுத்து, பணத்தைக் கேட்டு போலீசில் புகார் செய்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவுசெய்து ருக்குமணி (50), கோபி (48) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications