ஐந்தாவது முறையாக காட்டுக்குப் புறப்பட்டார் கோபால்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சந்திக்க ஐந்தாவது முறை நக்கீரன் கோபால்ஞாயிற்றுக்கிழமை காலை காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் அரசு தூதராக நான்கு முறை காட்டிற்கு சென்று வந்தஅரசு தூதர் நக்கீரன் கோபால் ஐந்தாவது முறையாக காட்டிற்கு ஞாயிற்றுக்கிழமையன்றுகிளம்பிச் சென்றார்.
சென்னையில் இருந்து நக்கீரன் ஆசிரியர் கோபாலும்,ஏற்கனவே காட்டிற்கு சென்றநக்கீரன் குழுவினரும் சேர்ந்து காட்டிற்குள் செல்வாக்கள் என கூறப்படுகிறது.
அரசு தூதரான நக்கீரன் கோபாலுடன் இந்த முறை புதிதாக மூன்று பேர் செல்வார்கள்என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பழ. நெடுமாறன், புதுவை மக்கள் சிவில் உரிமைக்கழக செயலாளர் சுகுமாரன் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர்ஒருவரும் காட்டிற்குள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
அரசு தூதர் தவிர, பழ.நெடுமாறன், சுகுமாறன், பேராசிரியர் மூன்று பேரையும் காட்டில்இருந்து வீரப்பன் பத்து நாட்களுக்கு முன்பே காட்டிற்கு அழைத்து வரச்சொன்னதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி, அரசு தூதரிடமே, மூவரையும் அழைத்து வாருங்கள் என வீரப்பன்சொன்னாராம். நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கடந்த முறை காட்டுக்குச் சென்ற போது,வீரப்பனுக்கும், தூதருக்கும் சுமுகமான சூழ்நிலை இல்லை என்கிறார்கள்.
என் கோரிக்கைகள் எதையும் இரு அரசுகளும் நிறைவேற்றாமல் நாடகமாடிக்கொண்டிருக்கிறது என்று ஆவேசப்பட்டாராம் வீரப்பன்.
இந்த நிலையில்தான், நெடுமாறன், சுகுமாரன், பேராசிரியர் ஆகிய மூவரையும்அழைத்துவரும்படி வீரப்பன் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோபால் மட்டுமே சென்னையில் இருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார். மற்றவர்கள்பற்றி ஏதும் தெரியாது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications