For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுகோஸ்லாவியா புதிய அதிபராகப் பதவியேற்றார் விஜிஸ்லாவ் கோஸ்டுனிகா

By Staff
Google Oneindia Tamil News

பெல்கிரேடு:

யுகோஸ்லாவியா நாட்டின் புதிய அதிபராக விஜிஸ்லாவ் கோஸ்டுனிகாஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் இவர் முன்னாள் அதிபர் ஸ்லோபோடன்மிலோசெவிக்கைத் தோற்கடித்தார். ஆனால், தோல்வியை ஒப்புக் கொள்ளமிலோசெவிக் மறுத்து பதவியிலிருந்து விலக மறுத்துவிட்டார்.

இதையடுத்து நாட்டில் பெரும் வன்முறை வெடித்தது. நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தஒரு கும்பல் கட்டத்துக்குத் தீவைத்தது. மேலும் அங்கிருந்த பல பொருட்களைச்சூறையாடியது.

இத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன.மிலோசெவிக்குக்கு ஆதரவாக இருந்த ரஷ்யாவும், தேர்தலில் வெற்றி பெற்றகோஸ்டுனிகாவை புதிய அதிபராக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.

இதையடுத்து பதவியிலிருந்து மிலோசெவிக் நீக்கப்பட்டார். இப்போது புதியஅதிபராக கோஸ்டுனிகா பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

வன்முறையாளர்களால் நாடாளுமன்றக் கட்டடம் சேதப்படுத்தப்பட்டதை அடுத்துபதவியேற்பு விழா, நவீன மாநாட்டுக் கூடத்தில் நடைபெற்றது. மிகவும் எளிமையாகஇவ் விழா நடத்தப்பட்டது.

புதிய அதிபர் பதவியேற்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் முதல் கூட்டத் தொடரும்அப்போதே தொடங்கியது.

யுகோஸ்லாவியா நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பு அதன்படி நடப்பேன்.நாட்டின் இறையாண்மையையும், சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டையும்கட்டிக்காப்பேன். நாட்டு மக்களின் உரிமைகளுக்கு மதிப்புக் கொடுப்பேன்.

மரியாதையுடனும், சுயநினைவுடனும் எனது பணியை நான் மேற்கொள்வேன் என்றுபதவியேற்வு நிகழ்ச்சியில் அதிபர் கோஸ்டுனிகா உறுதி எடுத்துக் கொண்டார்.

கடந்த மாதம் நடத்த தேர்தலில் கோஸ்டுனிகாவின் கட்சி பெரும்பான்மை இடங்களில்வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பதவியிலிருந்து நீக்கப்பட்ட மிலோசோவிக்,யுகோஸ்லாவியாவிலேயே தொடந்து இருந்து நாட்டில் அரசியல் ரீதியான எதிர்ப்பைத்தொடர்ந்து மேற்கொள்ளப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X