புஷ் முந்துகிறார் .. அல் கோர் பிந்துகிறார்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரஸ்யமான கட்டத்தை அடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும், டெக்சாஸ்கவர்னரும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகனுமான ஜார்ஜ் புஷ் 48 சதவிகிதஆதரவைப் பெற்றுள்ளார். இது கடந்த இரண்டு நாட்களில் ஜனநாயகக் கட்சிவேட்பாளர் அல் கோரைவிட 7 சதவிகிதம் அதிகமாகும்.
சனிக்கிழமையனன்று அமெரிக்காவின் சிஎன்என்/அமெரிக்கா டுடே/ காலப்ஆகியவை சேர்ந்து நடத்திய கருத்துக் கணிப்பில், புஷ்ஷுக்கு ஆதரவுஅதிகரித்திருப்பது தெரிய வந்தது.
இதற்கு முன் புஷ் இந்த அளவு ஆதரவு பெற்றதில்லை என கருத்துக் கணிப்புதெரிவிக்கிறது. ஆனாலும் புஷ்ஷுக்கு இப்போது இருக்கும் இந்த ஆதரவு தொடருமாஎன்பது சந்தேகம்தான். ஏனென்றால், இது வரை இரண்டு வேட்பாளர்களின் ஆதரவும்இரண்டு மூனறு தினத்திற்கு ஒரு முறை மாறி வருகிறது என்றும் அநத்க கணிப்புதெரிவிக்கிறது.
தற்போது வேட்பாளர்களின் விவாதங்கள் நடந்து வருகின்றன. முதல்விவாதத்தின்போது அல்கோர் அனைவரையும் கவர்ந்தார். அவரைத் தனிப்பட்டமுறையில் விமர்சித்ததால், புஷ்ஷுக்கு சிறிது ஆதரவு குறைந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.