இஸ்ரேல் விரைந்தார் கோஃபி அன்னான்
ஜெருசலம்:
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், திங்கள்கிழமை காலை இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களை அடுத்து அங்கு அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள அவர் அங்குவிரைந்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே, பாலஸ்தீனியர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரை மற்றும் காஸாபகுதியில் கடந்த 11 நாட்களாக கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதில் 80 பேருக்கும் மேல் இறந்துள்ளனர்.
தொடர்ந்து பாலஸ்தீன கொரில்லா படையினருக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
மோதலுக்குக், இஸ்ரேலும், பாலஸ்தீனமும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. பாலஸ்தீனம் தனது தாக்குதலை நிறுத்தவேண்டும்.இல்லையென்றால் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் எஹுத் பாரக் 48 மணி நேர கெடு விதித்துள்ளார்.
எல்லாவற்றுக்கும் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில் பாரக் மீது பாலஸ்தீனம்குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு ஆசிய அமைதி ஏற்படுவதை இஸ்ரேல் விரும்பவில்லை என்று பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
இப் பிரச்சினையை அடுத்து இஸ்ரேலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் விரைந்துள்ளார்.
அங்கு ஏற்பட்டுள்ள வன்முறையைத் தடுத்து நிறுத்தும் பணிகளை அவர் விரைந்து மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் இணைந்துபணிகளை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் இஸ்ரேல் செல்வார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications