மீனாட்சி கோவிலில் மூலிகை ஓவியங்கள் திறப்பு
மதுரை:
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மூலிகையால் வரையப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் படங்களின் திறப்பு விழா திங்கள்கிழமை நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்றாமரைக் குளம் அருகே உள்ள பிரகார சுற்றுச்சுவரில் ரூ 26 லட்சம் செலவில் இயற்கை மூலிகைகளால்ஓவியங்கள் வரையும் வேலை நடந்து வருகிறது.
சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை விளக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்படுகின்றன. கேரள மாநிலம் குருவாயூர் ஓவியர் டி.வினோத் இந்தஓவியங்களை வரைந்து வருகிறார்.
முதல் ஓவியமாக மீனாட்சி அம்மன் கோவிலின் வரைபடம் தீட்டப்பட்டு, அதில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஓவியங்கள் வரைந்து முடிக்கப்பட்டு விட்டன.இதன் கண்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் தமிழ்க்குடிமகன் பேசியதாவது:
தமிழர்கள் கட்டிடக்கலை, நடனக்கலை, ஓவியக்கலைகளில் திறமைமிக்கவர்கள் என்பதை நிருபித்து வருகிறார்கள். இயற்கை மூலிகைளால் வரையப்படும்ஓவியங்கள் நூற்றாண்டு காலம் இருக்கும்.
1975 ம் ஆண்டு இந்தசமய அறநிலையத்துறை தொடங்கப்பட்டு தற்போது பவளவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 2, 589 கோவில்களில் திருப்பணி நடந்து இருக்கிறது. கடந்த ஆட்சியில் 5 ஆண்டுகளில் 820 கோவில்களில் தான் திருப்பணிகள்நடைபெற்றன என்றார் அமைச்சர் தமிழ்க்குடிமகன்.