டீசல் விலை உயர்வு: வாஜ்பாயை சாடுகிறார் சோனியா
போபால்:
பாரதிய ஜனதாக் கட்சியின் பொருளாதாரக் கொள்கை, சாதாரண மனிதனைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.
ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்தியப் பிரதேச மாநிலம் சென்ற சோனியாகாந்தி அங்கு காந்த்வா மாவட்டத்தில் ஜிகிரி, பெட்டூல் மாவட்டத்தில் பாத்கிராமம் மற்றும் சிந்வாரா பகுதிகளுக்குச் சென்றார்.
ஜிகிரியில் அவர் நாடாளுமன்ற முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் சிவகுமார் சிங்கின் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் இன்ஜினியரிங் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழாவிலும் கலந்து கொண்டார்.
பின்னர் நடந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களான, பெட்ரோல், டீசல்,சமையல் கியாஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தியது. இதனால் சாதாரண மனிதர்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். இந்த நேரத்தில்இந்த விலைஉயர்வு தேவையில்லாதது.
வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சியினர் சந்தர்ப்பவாதிகள். அவர்களுக்கு பதவி ஆசை மட்டும்தான் உள்ளது. மக்களின் பிரச்சனைகளைஅவர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என்றார் சோனியா காந்தி.
ஜிகிரி பயணத்தை முடித்துக்கொண்டு அவர் பெட்டூல் மாவட்டம் பாத் கிராமத்திற்குச் சென்றார். அங்கு வைரல் காய்ச்சல் மற்றும் மலேரியாவினால்பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய சோனியா மலேரியா மற்றும் வைரல் நோய்கள் பரவாமல் தடுக்கமாநில அரசும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று உறுதியளித்தார்.
அங்கிருந்து சிந்துவாரா பகுதிக்குச் சென்ற சோனியா, அங்கு முன்னாள் பிரதமரும், தனது கணவருமான ராஜீவ்காந்தி நினைவு இல்லத்தைத் திறந்துவைத்தார்.
கர்நாடகா, நாகலாந்து மாநிலங்களைப் போல் மத்தியப்பிரதேசத்திலும் காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்து வருகிறது. முன்னதாக மத்தியப் பிரதேச மாநிலம்இந்தூர் விமானநிலையத்தில் மாநில முதல்வர் திக் விஜய் சிங், சோனியா காந்தியை வரவேற்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications