காவிரியில் வெள்ளம் ... 1000 குடிசைகள் மூழ்கின
ஈரோடு:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தாழ்வான பகுதியில் இருந்த 1000 குடிசைகள் நீரில் மூழ்கின.
காவிரி ஆற்றின் நீர்ப் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்துஇந்த ஆற்றின் கரையோரம் உள்ள பள்ளிபாளையம், பவானி, குமாரபாளையம்,ஈரோடு ஆகிய இடங்களில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளப் பெருக்கில் கரையோரம் தாழ்வான பகுதியில் இருந்த 1000 குடிசைகள் நீரில்மூழ்கின. இங்குள்ள ஆற்றில் தற்போது ஏழரை அடி அளவிற்குத் தண்ணீர் சென்றுகொண்டுள்ளது.
ஏற்கனவே, வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டிருந்ததால் பெரும் உயிர்சேதம்தவிர்க்கப்பட்டது. மேலும் வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளைஎடுத்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவுஅதிகரித்துள்ளது. இந்த தண்ணீரின் அளவு, நிமிடத்திற்கு ஒரு லட்சம் கன அடி என்றவிகித்தில் தற்போது வந்து கொண்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் தற்போது 122 அடியாக உள்ளது.
மேட்டூர் அணையின் 16 கண் பாலம் எனப்படும் மதகு திறக்கப்பட்டுள்ளது. இதனால்அதிகபட்ச தண்ணீரை அணையிலிருந்து வெளியேற்ற முடியும். இது தவிர, நாமக்கல்,ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், நாகபட்டிணம், திருவாரூர் மற்றும் காரைக்கால்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற அரசு உத்தரவிட்டுள்ளது.இவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தேவையான ஏற்பாடுகளைவருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.