For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழந்தை இல்லாததால் கணவன், மனைவி தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்:

குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் மனைவி இருவரும் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.

திருப்பூரில் காலேஜ் ரோட்டில் சாதிக் நகரில் வசித்து வந்தவர் வேலுச்சாமி (35). இவர் புதுக் கோட்டைமாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் பாக்கியலட்சுமி (30) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்நடந்தது. இவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இதனால் விரக்தியுடன் வசித்து வந்தனர்.

நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்து போனதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.இதையடுத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள்வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால், வேலுச்சாமி தீயில் கருகி அதே இடத்தில் இறந்து போனார்.

பாக்கியலட்சுமி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X