மீண்டும் செல்வாக்கு பெறும் இந்திய கிரிக்கெட்
டெல்லி:
நைரோபியில் நடந்து வரும் ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப்போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ள நிலையில், இந்தியாவில்கிரிக்கெட் மீண்டும் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
மேட்ச் பிக்ஸிங் புகாரினால் இந்திய கிரிக்கெட் சமீப காலமாக சோர்வுடன்காணப்பட்டது. கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஒரு மாதிரியாகவே பார்க்கப்பட்டனர்.ஒவ்வொரு வீரர் குறித்தும் கதைகள் கூறப்பட்டன. மொத்தத்தில் இந்தியாவில்கிரிக்கெட் தனது செல்வாக்கை இழந்து விட்டதாகவே கருதப்பட்டது.
இந்த நிலையில் வந்தது மினி உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி எனஅழைக்கப்படும் ஐ.சி.சி. நாக் அவுட் தொடர். இந்தப் போட்டியின் அரை இறுதிக்குஇந்தியா தகுதி பெற்றுள்ளது. முதல் போட்டியில் கென்யாவை வீழ்த்தியபோது,கென்யாவை வெல்வது பெரிதல்ல என்று கூறினர். ஆனால் உலக சாம்பியன்ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபோது, இந்திய ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்குச்சென்றனர்.
இந்திய கிரிக்கெட மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறித்த கிரிக்கெட்கமெண்டரிகளை செய்து வரும் நரோத்தம் பூரி கூறுகையில், இந்திய ரசிகர்களின் மனநிலையை ஊகிப்பது மிகவும் கடினமான செயல். மேட்ச் பிக்ஸிங்கினால் ஏற்பட்டகுழப்பம் இன்னும் தொடர்கிறது. இருப்பினும் இதுவரை யாருடைய குற்றமும்நிரூபிக்கப்படாதது ரசிகர்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது என்றார்.
சர்வீசஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இப்போதையைபயிற்சியாளருமான ஆர்.கே.ஓரி கூறுகையில், முன்பெல்லாம் கிரிக்கெட் பயிற்சிக்காகசிறுவர்கள், மாணவர்களின் பெற்றோர் அலைமோதூர்கள். ஆனால் மேட்ச் பிக்ஸிங்புகாருக்குப் பிறகு இந்த எண்ணிக்கை குறைந்து விடடது. வேறு விளையாட்டுகளைகற்றுக் கொள்ளுமாறு தங்களது குழந்தைகளிடம் பெற்றோர் கூற ஆரம்பித்து விட்டனர்என்கிறார் ஓரி.
தற்போதைய நைரோபித் தொடர் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு மீண்டும் மரியாதையைஈட்டிக் கொடுத்துள்ளது. இறுதிப் போட்டிக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்பும், வழக்கம் போல பெட்டிங்கும் துவங்கி விட்டன.
இதற்கிடையே, இந்தியாவுடன், அரை இறுதிப் போட்டியில் விளையாட தென்ஆப்பிரிக்க அணி தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடன் நடந்த கால் இறுதிப்போட்டியில் அது வெற்றி பெற்றது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications