ஜெவுக்கு ஜெயில்: மகிழ்ச்சியில் பா.ஜ.க.
சென்னை:
ஜெயலலிதாவுக்கு கிடைத்துள்ள தண்டனை காரணமாக அரசியல் கூட்டணிகளில் மாற்றம் வரும் என்று மத்திய அமைச்சர்வெங்கையா நாயுடு கூறினார்.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில்,
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத்தீர்ப்புக்கள் அரசியலில் ஆச்சர்யப்படத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
இந்த தீர்ப்புகள் பாரதீய ஜனதா கட்சிக்கு பெரிய வலுவைஏற்படுத்தும். மாநில அளவில் தி.மு.கவுக்கு சாதகமாக அமையும்.அரசியல் அணிகளிலும் இந்த தீர்ப்பு மாற்றங்களை ஏற்படுத்தும்.
அரசியல்வாதிகளுக்கு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில்பல்வேறு கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்தப்பட்டன. எம்.பிக்கள் விலைக்கு வாங்கப்பட்டார்கள். அதன் காரணமாக இப்பொழுதுநரசிம்மராவ் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
அதே போல் இப்பொழுது ஜெயலலிதாவும் தண்டனையில் சிக்கியுள்ளார். ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க இல்லை.
பாரதீய ஜனதா கூட்டணியில் பா.ம.க நீடிக்கிறது. கூட்டணிக்குள் சில பிரச்சனைகள் இருந்தாலும் முதல் அமைச்சர் கருணாநிதிஅதை தீர்த்து வைப்பார். வரும் 14-ம் தேதி டெல்லியில் வருவாய்த்துறை செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. மக்களுக்குவிழிப்புணர்வை ஏற்படுத்தி கிராம வளர்ச்சியில் அவர்களை ஈடுபடுத்துவது எங்கள் நோக்கமாகும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.