கோவை செல்கிறார் முதல்வர் கருணாநிதி
கோவை:
தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கோவை வருகிறார்.
அக்டோபர் 21 மற்றும் 22ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி கோவை மாவட்டத்தில்பல்வேறு அரசின் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
திருப்பூரில் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் பணிகளை துவக்கி வைக்கிறார். கோவைமாவட்டத்தில் இரண்டாவதாக அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தைநெருப்பெரிச்சலில் திறந்து வைக்கிறார்.
கடந்த முறை பொள்ளாச்சியில் ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனத் திட்டத்தை திறந்துவைக்க இயலாமல் போனதால், இந்த முறை "ஒருமடை விட்டு ஒருமடை பாசனம்குறித்த கருத்தரங்கை துவக்கி வைக்கிறார்.
இந்த கருத்தரங்கில் துவக்க உரையாற்றி விட்டு, உடுமலைப் பேட்டையில்அமைக்கப்பட்டிருக்கும் நாராயண கவி மண்டபத்தை திறந்து வைக்கிறார்.
கோவையில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, நீண்ட நாட்களாகதிறப்பு விழா நடக்காமல் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை இந்த முறை திறந்துவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications