Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனவாதத்தை நிராகரித்த இலங்கை மக்கள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் அதிகம் பரபரப்பூட்டிய சிங்களஇனவாத கட்சியான சிங்கள உருமயா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. மக்கள்இதுபோன்ற கட்சிகளுக்கு ஆதரவாக இல்லை என்பதையே இது காட்டுவதாகஅரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவம் படுதோல்வி கண்டு கொண்டிருந்த நேரத்தில் அரசின் போக்கைக் கண்டித்து இந்தக கட்சிபிறந்தது.

அரசைக் குறை கூறி மக்களின் வாக்குகளைப் பெற கணக்கிட்டது இந்தக் கட்சி. ஆனால்இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட இந்தக் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.சில இடங்களில் மூன்று இலக்கத்தை கூட எட்ட முடியவில்லை.

விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் உள்ள யாழ்ப்பாணத்தில் கூட இக்கட்சிபோட்டியிட்டது. அங்கிருந்து வெளியேறிய சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறஅது கணக்குப் போட்டது. ஆனால் அது கூட கிடைக்கவில்லை.

இந்தக் கட்சி குறித்து ஒரு பத்திரிகையாளர் கூறுகையில், ஒருவேளை லண்டன், பாரீஸ்அல்லது நியூயார்க் நகரங்களில் வாக்குச் சாவடிகளை அமைத்திருந்தால், இக்கட்சிக்குசில வாக்குகள் கிடைத்திருக்கும். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மேல் தட்டுமக்களைக் கொண்ட சிங்களக் கட்சி இது என்றார்.

சிங்கள உருமயா கட்சியில் முக்கிய உறுப்பினர் ஒருவர் இருக்கிறார். அவர்தான்வெட்டிமுணி ரோஹன டிசில்வா. 1987-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகொழும்புவில் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றபோது அவரது தலையில்துப்பாக்கியால் அடித்தவர் இவர்தான்.

இந்தக் கட்சியின் தலைவர் குணசேகரா தேர்தல் பிரசாரத்தின்போது பேசுகையில்,பிரபாகரனை சவப் பெட்டியில் பார்க்க விரும்புகிறோம் என்று கூறியிருந்தார். ஆனால்அவர்களது கட்சியின் இப்போதையை நிலை அதை விட மோசமாகவே இருக்கிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+