பணியைத் தொடங்கினார் வாஜ்பாய்
மும்பை:
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பெண் புலி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு தோல் உரிக்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய், வனத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளார்.
மூட்டு வலிக்காக, மும்பை பிரீசகன்டி மருத்துவமனையில் பிரதமர் வாஜ்பாய்க்கு அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது.தற்போது அவர் ஓய்வில் உள்ளார். இந்த நிலையில், ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் பெண் புலி, சகிகொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து வெளியாகியிருந்த செய்தியைப் படித்தார். இதையடுத்துடெல்லியிலுள்ள வனவிலங்குகள் துறை ஐ.ஜி.யைத் தொடர்பு கொண்டு பேசினார்.
பெண் புலி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவரிடம்கேட்டுக் கொண்டார்.
ஹைதராபாத்தில் உள்ளது நேரு உயிரியல் பூங்கா. இந்தப் பூங்காவில் இருந்த 13 மாதமே ஆன சகி என்ற பெண்புலியைக் கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாகக் கொன்றனர். பின்னர் அதன் தோலைஉரித்து கொண்டு சென்று விட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications