ஜெயிலுக்குப் போனா சால்வை ... த.மா.கா. ஸ்டைல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றிகரமாக முடித்த த.மா.கா. தலைவர்களுக்குமூப்பனார் புதன் கிழமை சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மக்கள் பிரச்னைகளை முன் வைத்து கடந்த மாதம் 28ம் தேதி தமிழகம் முழுவதும் சிறைநிரப்பும் போராட்டத்தை த.மா.கா. நடத்தியது.

234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைபெற்ற இப்போராட்டம் பெரிய அளவில்வெற்றி பெற்றதாக இக்கட்சி மகிழ்ச்சி தெரிவித்தது.

இந்நிலையில் போராட்டத்தை நடத்துவதற்காக 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்தலைவர்களை இக்கட்சித் தலைவர் மூப்பனார் நியமித்திருந்தார். அவர்கள்தலைமையில் தான் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.

சென்னையில் புதன் கிழமை 234 தொகுதித் தலைவர்களையும் அழைத்து மூப்பனார்ஆலோசனை நடத்தினார். சிறையை வெற்றிகரமாக நிரப்பிய தொகுதித்தலைவர்களுக்கு அவர் சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.

பின்னர் மாநில நிர்வாகிகள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்திநடராஜன்,தனுஷ்கோடி ஆதித்தன், சோ.பாலகிருஷ்ணன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டநிர்வாகிகளுடன் மூப்பனார் அடுத்தக் கட்ட போராட்டம் பற்றி விவாதித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுமக்களிடம் ஒரு கோடிகையெழுத்து பெறும் இயக்கம் இக்கட்சியினால் சமீபத்தில் நடத்தப்பட்டது.

தமாகாவின் இந்த கையெழுத்து இயக்கத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தகையெழுத்துக்களை கவர்னரை சந்தித்து கொடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

இன்னும் ஓரிரு நாட்களில் கவர்னரை சந்தித்து ஒரு கோடி கையெழுத்துக்கள்ஒப்படைக்கப்படும் என்றார் மூப்பனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+