ஜெ. முடிந்தது .. அடுத்த குறி கருணாநிதி தான்: சுவாமி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவிற்கு தண்டனை கிடைத்து விட்டதால் திமுகவினர் மகிழ்ச்சி அடையவேண்டாம். அடுத்ததாக கருணாநிதி மீதும் வழக்குத் தொடரப் போகிறேன் என்றுஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி எச்சரித்துள்ளார்.

டான்சி வழக்கில் ஜெயலலிதா சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கு காரண கர்த்தாவே இந்தசாமி தான். இவர் தொடர்ந்த வழக்கில் தான் டான்சி விவகாரமே வெடித்தது.

இப்போது இவர் ஜெயலலிதாவுக்கும் வேண்டாதவர்; கருணாநிதிக்கும் ஆகாதவர்என்ற நிலையில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். எனவே கருணாநிதியையும்விட்டு வைக்கப் போவதில்லை என்று எச்சரித்துள்ளார்.

வேலூரில் நடந்த ஜனதா கட்சிக் கூட்டம் ஒன்றில் சாமி பேசியதாவது:

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமென நான் வழக்கு போட்டபின்னர் தான் அரசுக்கு அக்கறையே வந்துள்ளது.

டான்சி வழக்கில் ஜெயலலிதாவிற்கு 3 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது குறித்துதிமுகவினர் உற்சாகத்தில் மிதக்கின்றனர். நான் அதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

ஜெயலலிதாவிற்கு கிடைத்த தண்டனை குறித்து திமுகவினர் சந்தோஷப்படவேண்டாம். என்னுடைய அடுத்த வழக்கு கருணாநிதி மீது தான். அதனால்ஜெயலலிதாவும் கவலைப்பட வேண்டாம்.

டான்சி வழக்கில் ஒருவேளை ஜெயலலிதாவிற்கு ஆதரவாக தீர்ப்புவழங்கப்பட்டிருந்தால் டிவியில் ஜெயலலிதா மீது சாமி தொடர்ந்த வழக்குதோல்வியடைந்தது என்று போட்டிருப்பார்கள்.

லோக்சபா வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்ட போது அதில் எனதுபெயர் இல்லை. அப்போது ஜெயலலிதாவை கடவுள் தான் தண்டிக்க வேண்டும்என்றேன். அது தற்போது நிறைவேறி விட்டது.

இனிமேல் அவர் பல கோடி மதிப்புள்ள ஹோட்டலுக்கு போய் வரவு செலவு கணக்குபார்க்க போகலாம்.

ஜெயலலிதாவின் சிகாகோ தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. சிகாகோரகசியத்தை தக்க நேரத்தில் வெளியிடுவேன் என்றார் சாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+