For Daily Alerts
Just In
தடா கைதிகள் வழக்கு: விசாரணையை மீண்டும் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி:
மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் தடா கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை நடப்பதாக இருந்தது. இதற்காக கர்நாடக அரசு வழக்கறிஞர்கள்பட்டாளத்துடன் தயாராக இருந்தது.
ஆனால், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்துவிட்டது.
இந்த தடா கைதிகள் விடுவிக்கப்பட்டால் தான், நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பேன் என சந்தன வீரப்பன்அறிவித்துள்ளார்.
வீரப்பனுக்கு உதவியதாகக் கூறி 121 தமிழர்களை கர்நாடக அதிரடிப்படையினர் கைது செய்து விசாரணை கூடசெய்யாமல் 7 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
இவர்களில் 70 பேர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். ஆனால், 51 ஜாமீனில் வர பணம் இல்லாததால் சிறையில்விசாரணை கூட இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, October 11, 2000, 5:30 [IST]