கவலைப்படாதீர்கள்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா கோரிக்கை
சென்னை:
டான்சி வழக்கில் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதித் தீர்ப்பல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதிமுகவினர் யாரும் கவலை அடையத் தேவையில்லை. இது இறுதி தீர்ப்புஅல்ல.மேல்முறையீடுகளுக்கு வாய்ப்புகள் உள்ளன.எனவே என்னை வேதனைப்படுத்தும் வகையில் அதிமுகவினர் யாரும்தங்களை வருத்திக் கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டாம்.
நீதிமன்றத் தீர்ப்புகளை காட்டி மக்கள் மன்றத்தில் அதிமுகவுக்கு இருக்கும் செல்வாக்கை அழிக்க நினைக்கும் எதிரிகள் இறுதியில்தோல்வி அடைவது உறுதி. இதே டான்சி வழக்கில் அடிப்படை ஆதாரமே இல்லை என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றம்என்னை விடுவித்தது.
அதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ததால் உச்சநீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் வழக்கை விசாரித்த தனிநீதிமன்றம் வேறு வகையான, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறான தீர்ப்பை அளித்துள்ளது.
ஏற்கனவே என் மீது வழக்குத் தொடர்வதற்கு அனுமதி அளிக்க கவர்னருக்கு தகுதி உண்டா என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், திமுக அரசு அவசர அவசரமாக 2-வது கவர்னரை அணுகி அனுமதி பெற்றுவழக்கை நடத்தியது.
இப்படி முன்னுக்கு பின் முரணான தீர்ப்புகளை பார்க்கும் நமக்கு, நியாயம் கிடைக்கும் வாய்ப்புகள் இன்னும் உறுதியாக உள்ளனஎன்பது தெளிவாகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.