ஒத்திவைக்கப்பட்ட அதிமுக பொதுக்குழு 24ல் கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட அதிமுக பொதுக் குழுக் கூட்டம்அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இதற்கானஅறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அவைத் தலைவர் காளிமுத்து பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார். கட்சி உறுப்பினர்கள், சிறப்புஅழைப்பாளர்கள் ஆகியோர் கூட்டத்திற்குத் தவறாமல் வர வேண்டும் என்றுகூறியுள்ளார்.
முன்னதாக இக்கூட்டம் அக்டோபர் 10-ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் 9-ம்தேதி வெளியான டான்சி வழக்கு தீர்ப்பில் ஜெயலலிதாவுக்குத தண்டனைவிதிக்கப்பட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications