கோவை-கொச்சி இடையே விரைவில் மின்சார ரயில்
கோவை:
கோயம்பத்தூர், கொச்சின் நகரங்களுக்கு இடையே மின்சார ரயில் விடப்படும் என்றுமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஓ.ராஜகோபால் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கோவை-கொச்சி,கோவை-பாலக்காடு பிரிவில் மின்சார ரயில் விட தென்னக ரயில்வே திட்டமிட்டுவருகிறது. இங்கு மின்சார வசதி தயாராகி விட்டால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இப்பிரிவில்விடப்படும்.
தற்போது 200 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கோவை-கொச்சி பிரிவில் மின்சாரரயில்களை இயக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் இதை சரிசெய்வதற்கு முன் மாற்று ஏற்பாடு மூலமாக மின்சார ரயில்களை இயக்கலாமா என்பதுகுறித்து பரிசீலனை நடந்து வருகிறது.
கரூர்-சேலம் இடையே ரூ. 225 கோடி மதிப்பில் புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வேதிட்டமிட்டு வருகிறது. இதேபோல, கடலூர்-சேலம் ரயில் பாதை ரூ. 200 கோடிசெலவில் அகல ரயில்பாதையாக மாற்றப்படும். இந்த செலவுகளை, ரயில்வேயும்,மாநில அரசும் பகிர்ந்து கொள்ளும்.
கோவை-சென்னை இடையிலான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சேரன் எக்ஸ்பிரஸ்ரயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படும்.
கோவை ரயில் நிலையத்தில், ஓய்வறை மற்றும் இரண்டு மாடி கட்டடம் ஆகியவைபுதிதாக கட்டப்படும்.
டெல்லியில் விரைவில் இன்டர்நெட் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதிஏற்படுத்தப்படும் என்றார் ராஜகோபால்.
யு.என்.ஐ.