தவணை முறையில் கையெழுத்து வாங்கும் த.மா.கா.
சென்னை:
சென்னையில் திங்கள் கிழமை கவர்னர் பாத்திமா பீவியை சந்தித்து 40 லட்சம்கையெழுத்துக்கள் அடங்கிய மனுவை த.மா.கா. தலைவர் மூப்பனார் அளித்தார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில்மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஒரு கோடி பேரிடம்கையெழுத்துப் பெற்று விலை உயர்வை வாபஸ் பெறக் கோரி கவர்னரை சந்தித்து மனுகொடுப்பது என்று த.மா.கா. தீர்மானித்தது.
அதன்படி மாநிலம் முழுவதும் கையெழுத்து வேட்டையில் த.மா.கா.வினர்ஈடுபட்டனர். முதல் கட்டமாக 40 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
அந்த பட்டியலுடன் திங்கள் கிழமை ராஜ்பவனுக்கு கட்சி நிர்வாகிகள் ஜெயந்திநடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட 20 பேர்களைஅழைத்துக் கொண்டு சென்றார் மூப்பனார். அங்கு கவர்னரை சந்தித்து அந்தபட்டியலுடன் கோரிக்கை மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இரண்டாவது கட்டமாக 60 லட்சம்கையெழுத்துக்கள் பெறப்பட்டு விரைவில் கவர்னரிடம் வழங்கப்படும். மத்திய அரசுஇந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.
நிர்வாகச் செலவுகளை குறைப்பதன் மூலம், பல்வேறு அமைச்சகங்களுக்கு ஆகும்செலவை குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை மத்திய அரசு கைவிட முடியும்.அதைச் செய்யாமல் சாதாரண ஏழை மக்கள் தலையில் கையை வைப்பது கடுமையாககண்டிக்கத்தக்கது என்றார் மூப்பனார்.












Click it and Unblock the Notifications