For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாய்க்கு புற்றுநோய் .. தாயுடன் சேர்ந்து 2 மகன்கள் தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய் இறந்துபோவதை பொறுக்க முடியாத இரண்டுமகன்கள் உட்பட மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருப்பூர் அருகே உள்ள அங்கேரிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரதுமனைவி அமிர்தம் (60). இவருக்கு சீனிவாசன் (35), சண்முகம் (32) இரண்டு மகன்கள்இருந்தனர்.

அமிர்தம் கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காகபல இடங்களில் மருத்துவத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், புற்று நோய் மிகவும்முற்றிய நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறி விட்டனர்.

மேலும் இன்னும் சில நாட்கள் மட்டுமே அமிர்தத்தால் உயிர் வாழ முடியும் எனடாக்டர்கள் கை விரித்து விட்டனர். எனவே தாயின் மரணம், இரண்டு மகன்களையும்வருத்தியது.

தாயின் பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலாது என தீர்மானித்த இரண்டு பேரும்தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் இருவரின் முடிவையும்அறிந்து கொண்ட அமிர்தம் கதறி அழுதார்.

ஆனால் இரு மகன்களும் முடிவை மாற்றிக் கொள்ளாததால் அமிர்தமும் தற்கொலைசெய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து மூன்று பேரும் சேர்ந்து விஷம்குடித்தனர்.

மூவரும் விஷம் குடித்து விட்டு வீட்டிற்குள்ளேயே இறந்து விட்டனர். இது வெளியில்யாருக்கும் தெரியவில்லை. இரண்டு நாட்களாக நடமாட்டம் இல்லாத நிலையில்வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதை அருகில் இருந்த மக்கள்அறிந்தனர்.இதையடுத்து கதவைத் திறந்து பார்த்தனர்.

அப்போது 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X