விஷ வாயு தாக்கி 3 தொழிலாளிகள் சாவு
மேட்டூர்:
மேட்டூர் அருகே விஷ வாயு தாக்கி மூன்று பேர் இறந்தனர். 4 பேர் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காகமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரியில் ஒரு தேனிரும்புத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை கடந்த11ம் தேதி முதல் மூடப்பட்டிருந்தது. எனவே இதனை மீண்டும் இயக்குவதற்காக தொழிலாளர்கள் தயாராயினர்.
அப்போது செல்வராஜ் என்ற தொழிலாளி, பர்னேஸ் மீது இருந்த தார்பாலினை நீக்கினார். அப்போது திடீரென கார்பன்மோனாக்சைடு வாயு அங்கிருந்து வெளியேறியது. இதில் அவர் மூர்ச்சையடைந்து பர்னேசுற்குள் விழுந்தார்.
இவர் திறந்து விட்டதால் அருகில் நின்றிருந்த செந்தில்குமார், சிவகுமார் மற்றும் பூபதி ஆகியோரும் இந்த வாயுவால்பாதிக்கப்பட்டனர். மேலும், இவர்கள் மயக்கமடைந்து விழுவதைப் பார்த்த இருவர் உதவிக்காக வந்தனர். இவர்களும் பாதிப்படைந்தனர்.
பின்னர் இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனையில்செந்தில்குமார், முருகன், செல்வராஜ் ஆகியோர் இறந்தனர்.
மயக்கமடைந்த மற்ற நான்கு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications