கைதிகளை விடுவித்தே ஆக வேண்டும் என்கிறான் வீரப்பன்- கோவிந்தராஜ் பேட்டி
பெங்களூர்:
ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், மைசூர் தடா கைதிகளை எப்படியாவது விடுவித்தே ஆக வேண்டும் எனவீரப்பன் சொல்லிவிட்டான் என காட்டிலிருந்து நேற்று வெளியே வந்த ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜூகூறினார்.
நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறுகையில்,
யானைத் தந்தம் சாப்ட்வேர்
நிறுவனத்தின் சேர்மன் வீரப்பன்!"
எனக்கு உடல் நிலை பாைதிக்கப்பட்டது. ரத்தக் கொதிப்பால் அவதிப்பட்டேன். என்னை விட்டுவிடுமாறுவீரப்பனிடம் கெஞ்சினேன். அதனால் தான் என்னை விடுவித்தான்.
ராஜ்குமாரை வீரப்பனும் அவனது ஆட்களும் நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்கள். அவர் நலமுடன்இருக்கிறார். கடந்த 78 நாட்களில் எங்களை 35 இடங்கள் மாறறினார்கள். மூட்டு வலி இருப்பதாலும் ராஜ்குமார்அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
வீட்டில் எல்லாம் நாங்கள் தங்க வைக்கப்படவில்லை. காட்டில் தான் தங்கினோம். நாகப்பா தப்பியதால் வீரப்பன்கோபமடைந்தான். ஆனால், அந்தக் கோபத்தை எஙகள் மேல் காட்டவில்லை.
தமிழ்த் தீவிரவாதியான மாறனை வீரப்பன் பெரிதும் மதிக்கிறான். வீரப்பனுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள்என்று தெரியாது. ஆட்கள் மாற்றி மாற்றி காவலிருக்கிறார்கள் என்றார் கோவிந்தராஜூ.
உடனிருந்த ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். கமாண்டோ ஆபரேஷன்எல்லாம் நடத்தி அப்பாவின் உயிரோடு விளையாடக் கூடாது. நாங்கள் எந்த அரசையும் குறை கூறவில்லை.அவர்கள் நன்றாகவே இந்தப் பிரச்சனையை கையாள்கிறார்கள் என்றார்.
உடல் நிலை பாதிப்பால் ராஜ்குமார் மருமகனை விடுவித்த வீரப்பன்