For Quick Alerts
For Daily Alerts
Just In
விஷக் காய்ச்சல்: சவூதி, ஏமன் நாடுகளில் 146 பேர் சாவு
ரியாத்:
ரிஃப் வேலி என்ற விஷக் காய்ச்சலுக்கு சவூதி அரேபியா மற்றும் ஏமன் நாடுகளில்மொத்தம் 146 பேர் பலியாகியுள்ளனர்.
சவூதி அரேபியாவில் 76 பேரும் ஏமன் நாட்டில் 70 பேரும் பலியாயுள்ளனர். இது தவிரஇரு நாடுகளில் சேர்த்து 1000-க்கும் அதிகமானவர்கள் இன்னும் இந்த விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கால்நடைகளில் இருந்து கொசுக்கள் மூலம் இந்த ரிஃப் வேலி விஷக் காய்ச்சல்மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த விஷக் காய்ச்சல் தற்போது சவூதி அரேபியா-ஏமன்நாடுகளின் எல்லைப் பகுதியில் கடந்த மாதம் பரவியது.
இந்த விஷக் காய்ச்சலுக்கு நிறைய பேர் பலியாகியுள்ளதை அடுத்து எல்லைப்பகுதியில் இரு நாடுகளும் சேர்ந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
Comments
Story first published: Tuesday, October 17, 2000, 5:30 [IST]