For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷக் காய்ச்சல்: சவூதி, ஏமன் நாடுகளில் 146 பேர் சாவு

By Staff
Google Oneindia Tamil News

ரியாத்:

ரிஃப் வேலி என்ற விஷக் காய்ச்சலுக்கு சவூதி அரேபியா மற்றும் ஏமன் நாடுகளில்மொத்தம் 146 பேர் பலியாகியுள்ளனர்.

சவூதி அரேபியாவில் 76 பேரும் ஏமன் நாட்டில் 70 பேரும் பலியாயுள்ளனர். இது தவிரஇரு நாடுகளில் சேர்த்து 1000-க்கும் அதிகமானவர்கள் இன்னும் இந்த விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கால்நடைகளில் இருந்து கொசுக்கள் மூலம் இந்த ரிஃப் வேலி விஷக் காய்ச்சல்மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த விஷக் காய்ச்சல் தற்போது சவூதி அரேபியா-ஏமன்நாடுகளின் எல்லைப் பகுதியில் கடந்த மாதம் பரவியது.

இந்த விஷக் காய்ச்சலுக்கு நிறைய பேர் பலியாகியுள்ளதை அடுத்து எல்லைப்பகுதியில் இரு நாடுகளும் சேர்ந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X