For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் நல நிதிக்கு ரூ. 29 லட்சம் குவிந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 29 லட்சம் குவிந்துள்ளது.

இதுகுறித்து அரசு வியாழக் கிழமை வெளியிட்ட அறிக்கை:

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழிலதிபர்களும், வணிக பெருமக்களும்,செல்வந்தர்களும் ஏனைய ஆர்வமுடையோரும் தாரளமாக நிதியை வாரி வழங்கிடவேண்டுமாய் அண்மையில் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி வியாழக் கிழமை தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் மகனும்,செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமானஎம்.ஏ.எம்.ஆர்.முத்தையா 5 லட்ச ரூபாய்க்கான காசோலையையும், தொழிலதிபர்எம்.பி.டிஸ்லரீஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.பி.புருஷோத்தமன் 5 லட்ச ரூபாய்க்கானகாசோலையையும் முதல்வரை சந்தித்து வழங்கினர்.

முதல்வரின் வேண்டுகோளை ஏற்று தொழிலதிபர்களால் கடந்த 16ம் தேதிவழங்கப்பட்ட 19 லட்சத்தையும் சேர்த்து, முதல்வரின் பொது நிவாரண நிதிக்குஇதுவரை 29 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X