For Quick Alerts
For Daily Alerts
Just In
நீதிபதி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
சென்னை:
சென்னையில் மாஜிஸ்திரேட் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன.
சென்னை எழும்பூர் 5வது மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாகஇருப்பவர் ஜெயபாலன். இவரது வீடு சூளைமேடு பத்மநாபா நகரில் உள்ளது.
நள்ளிரவில் வீட்டு மொட்டை மாடி வழியாக கொள்ளையர்கள் வீட்டுக்குள்புகுந்துள்ளனர். மாஜிஸ்திரேட்டும், அவரது குடும்பத்தினரும் அப்போது ஆழ்ந்ததூக்கத்தில் இருந்தனர்.
வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 25 சவரன்நகைகள், ஒரு கிலோ வெள்ளி நகைகள், 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைகொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
காலையில் கண் விழித்த மாஜிஸ்திரேட் பீரோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அவரது புகாரின் பேரில் போலீசார் நீதிபதி வீட்டிலேயே கைவரிசை காட்டியகொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Comments
Story first published: Thursday, October 19, 2000, 5:30 [IST]