கரூர் அதிமுக எம்.பி. தேர்தலை எதிர்த்து வழக்கு
சென்னை:
கரூர் லோக்சபா தொகுதி தேர்தலில் அ.தி.மு.க எம்.பி சின்னசாமி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைவிசாரணைக்கு ஏற்று, அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.
கரூரைச் சேர்ந்த திலகர் என்பவர் சென்னை உ.யர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கரூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சின்ன சாமி, தனக்கு அடுத்த வந்த தி.மு.க வேட்பாளர் பழனிச்சாமியை விட கூடுதலாக இரண்டாயிரத்து847 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் மோசடி நடந்துள்ளது. சின்னசாமி மீது ஊழல் வழக்கு உள்ளது. தேர்தலின் போது வரம்பு மீறி சின்னசாமி செலவு செய்துள்ளார். பலஒட்டுச்சாவடிகளில் ஆள் மாறாட்டம் நடந்துள்ளது. சில இடங்களில் ஒட்டுச்சாவடிகளை கைப்பற்றியுள்ளனர்.
தி.மு.க வேட்பாளர் பழனிச்சாமிக்கு கிடைத்தஒட்டுக்களை சின்னசாமிக்கு விழுந்த ஒட்டுக்களோடு சேர்த்து எண்ணப்பட்டுள்ளது. ஒட்டு எண்ணிக்கையில்முறைகேடு நடந்துள்ளது.
எனவே, கரூர் தொகுதியில் பதிவான ஓட்டுக்களை மீண்டும் எண்ண உத்திரவிடவேண்டும். சின்னசாமி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருப்பன் ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ராமமூர்த்தி, மனுவுக்கு பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்திரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications