ம.தி.மு.க. தேர்தல் கொலை: தேடப்பட்டவர் சரண்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
நாமக்கல்லில் நடந்த ம.தி.மு.க. தொண்டர் கொலை தொடர்பாக நாமக்கல் கவுன்சிலர்சேலம் கோர்ட்டில் சரணடைந்தார்.
நாமக்கல்லில் ம.தி.மு.க. நகரச் செயலர் பதவிக்கான போட்டி நடந்தது. இந்த தேர்தலில்இளம்பரிதி சின்னச்சாமிக்கும், புகழேந்திக்கும் கடும் போட்டி நிலவியது.
இந்தப் போட்டி கடும் மோதலாக மாறி, தேர்தல் நடந்த திருமண மண்டபமே போர்க்களமானது. துப்பாக்கிச் சூடு, அடிதடி என நடந்தது. இதில் தென்னரசு என்ற தொண்டர்அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரைக் கைதுசெய்தனர். மேலும் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வந்த நாமக்கல் வார்டு கவுன்சிலர் நாகரத்தினம்என்பவர் சேலம் ஜே.எம்.3 கோர்ட்டில் சரணடைந்தார்.
இவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications