For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவுக்குத் தலைவணங்காத வாஜ்பாய் .. ஆர்.எஸ்.எஸ். புகழாரம்

By Staff
Google Oneindia Tamil News

கோடா:

அமெரிக்காவுக்குத் தலைவணங்காத முதல் இந்தியப் பிரதமர்வாஜ்பாய்தான் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் கே.எஸ்.சுதர்சன் தெரிவித்தார்.

கோடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுசிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகள்எல்லாம் ஒற்றுமையாக இருந்து மீதமுள்ள 4 ஆண்டு ஆட்சியையும்சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல எதிர்க்கட்சிகளின் பலஎதிர்ப்புகளையும், நிர்பந்தங்களையும் சகித்துக் கொண்டு அனைத்தும்சமாளித்து ஆட்சி நடத்தி வருபவர் வாஜ்பாய்.

அமெரிக்காவுடன் பல துறைகளில் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு இந்தியா மீதுபல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.

இருந்தாலும், அமெரிக்காவிடம் இந்தியா பணிந்து விடவில்லை.அமெரிக்காவுக்குத் தலைவணங்காத முதல் இந்தியப் பிரதமர்வாஜ்பாய்தான்.

உலகின் மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட்நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் இந்தியா வந்தபோது அவரிடம்பல மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்யும்படிபிச்சை கேட்டுள்ளனர். இது வெட்கக்கேடான விஷயமாகும்.

தேசிய நீரோட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையாகச்செயல்படவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்கொள்கை. இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ யாராகஇருந்தாலும், இந்தியர் என்ற ஒரே கொள்கையை மனதில் கொண்டுஒற்றுமையாக வாழவேண்டும் என்றார் சுதர்சன்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X