For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரன் எம்.பி. தேர்வு செல்லாது ..நீதிமன்றத்தில் வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுகவின் "அடுத்த வாரிசு தினகரன், பெரியகுளம் மக்களவைத் தொகுதியில்வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தினகரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவின் அக்காமகன் தினகரன். இவர் கடந்த லோக்சபா தேர்தலில் பெரியகுளம் தொகுதியில்போட்டியிட்டு வென்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் செல்வேந்திரன்போட்டியிட்டார்.

தினகரனுக்கு 3 லட்சத்து 3 ஆயிரத்து 881 ஓட்டுக்களும், செல்வேந்திரனுக்கு 2 லட்சத்து2 ஆயிரத்து 58 ஆயிரத்து 75 ஓட்டுக்களும் கிடைத்தன. இந்நலையில் திமுகவேட்பாளர் செல்வேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் வெற்றியைஎதிர்த்து மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 1999ம் ஆண்டு 4 கோடி ரூபாய் கொடுத்து தினகரன் சிங்கப்பூர்குடியுரிமை பெற்றிருக்கிறார். சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் மற்றும் அடையாளஅட்டை பெற்றுள்ளார். அது தொடர்பான சான்றுகளை நீதிமன்றத்தில்சமர்ப்பித்துள்ளேன்.

வெளிநாட்டு பிரஜையான ஒருவர் இந்திய அரசியல் சட்டம் 102(1)(டி) பிரிவின் கீழ்நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தல் அதிகாரி அவருடையவேட்புமனுவை நிராகரித்திருக்க வேண்டும். ஆனால், அவர் நிராகரிக்கவில்லை.

மேலும் தினகரன் மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்குத் தொடரப்பட்டு ரூ.31கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(1)(ஈ)பிரிவுப்படி தண்டிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாது.

எனவே அவருடைய தேர்தலை ரத்து செய்து செல்வேந்திரன் வெற்றி பெற்றதாகஅறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி சொக்கலிங்கம், தினகரனுக்கு 6 வாரகால அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X