"தீவிரவாதத்தை அங்கீகரித்து விட்டார் கருணாநிதி
ஸ்ரீரங்கம்:
தமிழகத்தில் தீவிரவாதம் வேரூண்றி வளர்ந்து வருவதையே, சுப்ரீம் கோர்ட்டில் தடாகைதிகள் விடுதலை தொடர்பான வழக்கில், நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்துஉறுதிப்படுத்துகிறது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில், வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை வீரப்பனிடம் தூதுஅனுப்பியதன் மூலம் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் முதல்வர்கருணாநிதி மறைமுகமாக அங்கீகரித்து விட்டார்.
மக்களுக்கு அடிப்படை வசதிகள் தருவதில் திமுக அரசு கவனம் செலுத்துவதில்லை.ரேஷன் கடைகளில் மண்ணெண்ணை, அரசி, கோதுமை போன்றவை முறையாகவழங்கப்படுகிறதா என்பதைக கவனிப்பதில்ல. மாறாக, ஜெயலலிதா மீது வழக்குப்போடுவதிலும் அவருக்குத் தண்டனை வாங்கித் தருவதிலுமே தீவிர கவனம் செலுத்திவருகிறது என்றார்.
யு.என்.ஐ.