தமிழகம் முழுவதும் மாதிரி காவல் நிலையங்கள் .. டி.ஜி.பி
திருச்சி:
தமிழகத்திலுள்ள 12,000 காவல் நிலையங்களையும் மாதிரி காவல் நிலையங்களாக்கதமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில டி.ஜி.பி. சர்மா கூறியுள்ளார்.
திருச்சியில், வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,ஏற்கனவே 419 காவல் நிலையங்கள் மாதரி காவல் நிலையங்களாகஅறிவிக்கப்பட்டுள்ளன.
போலீஸ், பொதுமக்களிடையே சிறந்த நட்புறவை உருவாக்கும் பொருட்டே இந்தத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
காவல்துறையை நவீனமயமாக்குவது தொடர்பாக மத்தியஅரசுக்கு பல திட்டங்கள்அனுப்பப்பட்டுள்ளன. மத்திய அரசும் ரூ. 68.10 கோடி நிதி வழங்குவதாகதெரிவித்துள்ளது. இதே அளவிலான நிதியை மாநில அரசும் விரைவில் ஒதுக்கும்.
தகவல் தொடர்பு சாதனங்களை அதிகரிப்பது, மோப்ப நாய்ப் படையைமேம்படுத்துவது, காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடிம், போலீஸாருக்குக்குடியிருப்பு ஆகியவற்றிற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றார் சர்மா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications