பிரியங்கா வீட்டு வேலைக்காரி தற்கொலை முயற்சி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா வீட்டில் வேலை செய்து வரும்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
பிரியங்கா வீட்டில் எலிசபெத் (15) என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். அவர்பிரியங்கா வசித்து வரும் கம்பவுண்டுக்கு உள்ளேயே உள்ள பணியாளர்கள்குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை இரவு மண்ணெண்ணைஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடல் கருகிய நிலையில் அவர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு மருத்துவர்கள் தீவிரசிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அந்த பெண் எதற்காக தீக்குளித்தார் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications