நாங்கள் போனால்தான் ராஜ்குமார் வருவார் .. தமிழ்த் தீவிரவாதி
தருமபுரி:
தமிழ்த் தீவிரவாதிகள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டு காட்டுக்குப் போய்ச்சேர்ந்தால்தான் நடிகர் ராஜ்குமார் விடுதலை செய்யப்படுவார் என்று தீவிரவாதிரேடியோ வெங்கடேசன் கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை வெடிகுண்டு சம்பவத்தில், கைதுசெய்யப்பட்டுள்ளவர் வெங்கடேசன். கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் இவர் மீதுவிசாரணை நடந்து வருகிறது.
வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் வெங்கடேசன் உள்படநான்கு பேரை நவம்பர் 1-ம் தேதி வரை காவலை நீடித்து நீதிபதி ராமசுப்ரமணியன்உத்தரவிட்டார்.
விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் குழுமியிருந்த செய்தியாளர்களிடம் வெங்கடேசன்பேசுகையில், எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அதுவரைஎங்களது போராட்டம் தொடரும்.
நாங்கள் விடுதலையாகிப் போனால்தான் ராஜ்குமாரை, வீரப்பன் விடுவிப்பார்.அதுவரை அவரது விடுதலை சாத்தியமில்லாதது என்றார் அவர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவர் வீரப்பனுடன் இருக்கும்தமிழ்த் தீவிரவாதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications