முட்டுக்கட்டை இருந்தும் முன்னேற்றத்தில் தெற்காசிய பெண்கள்
இஸ்லாமாபாத்:
தெற்காசிய நாடுகளில் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைப்பதில் பெரும்முட்டுக்கட்டை இருந்தாலும் கூட அதையும் மீறி அவர்கள் சமூகத்தில் முன்னேறிவருவதாக ஐ.நா. ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகைக் கழகத்தின் தலைவர் டாக்டர் நபீஸ் சாதிக்இந்த அறிக்கையை வெளியிட்டார்.
உலகிலேயே பெண்கள் மோசமாக நடத்தப்படுவாதக் கூறப்படும் தெற்காசியாவில்,பெண்கள் சமூக அளவில் வெகுவாக முன்னேறி வருகிறார்கள். தலைமைப் பொறுப்பில்இந்த நாடுகளில் அதிக அளவில் பெண்கள் உள்ளனர்.
அங்குள்ள பெண்களின் நிலை கல்வி மற்றும் பல துறைகளிலும் அவர்களுக்குஅளிக்கப்படும் வசதிகளும் வாய்ப்புகளும் ஆண்களுக்கு அளிக்கப்படுவதை விடகுறைவாகவே உள்ளன.
உலக பெண்கள் மக்கள் தொகையில் 21 சதவிகித பெண்கள் தெற்கு ஆசியாவில்வசிக்கிறார்கள். மேலும் உலகில் படிப்பறிவில்லாத பெண்களில் 44 சதவிகிதபெண்களும் இந்த பகுதியிலேயே வசிக்கிறார்கள்.
தெற்கு ஆசியாவின் நான்கு நாடுகளில் பெண்கள் தலைமைப் பொறுப்பில்இருந்துள்ளனர். இந்தியாவில் இந்திரா காந்தியும், பெனாசிர் புட்டோ பாகிஸ்தானிலும்பிரதமர்களாக இருந்துள்ளனர். கலிதா ஜியா வங்க தேச அதிபராக இருந்துள்ளார்.தற்போது ஷேக் ஹசீனா அதிபராக இருக்கிறார். இலங்கையின் அதிபராக சந்திரிகாகுமாரதுங்கா இருக்கிறார்.
தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தானில்தான் மிகவும் மோசமான நிலையில் பெண்கள்உள்ளனர். தெற்கு சிந்து மாகாணத்தின் பல பகுதிகளில் பெண்கள் இறந்த பின்னும் கூடஅவர்களது உடலை, இருட்டிய பிறகே கல்லறைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.ஏனென்றால் அவர்கள் பர்தா அணிந்து வாழ்ந்து வந்தவர்கள். அதனால் இறந்த பிறகும்அவர்கள் முகத்தை யாரும் பார்க்கக் கூடாது என்பதால் இந்த வழக்கத்தைக்கடைப்பிடிக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் முஸ்லிம் பெண்கள் படிப்பதற்கு அனுமதியில்லை. மாலத்தீவில் 51சதவீத பெண்கள் 5 வயதை அடையும் முன்னரே இறந்து விடுகின்றனர்.
இது தவிர பெண்களுக்கான அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.ஆண்களோடு ஒப்பிடும் போது பெண்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பும் குறைவாகவேஉள்ளது. சமுதாயத்திலும் பெண்களுக்கான அங்கீகாரம் குறைவாகவே உள்ளது.
பெண்களுக்கு தேவையான வாய்ப்புகள் அளிக்கப்படாவிட்டால் பெண்கள்முன்னேற்றமே ஏற்படாது என அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
சென்ற வருட அறிக்கை தெற்கு ஆசியாவிலுள்ள பெண்களின் கல்வித்தரம்,ஏழ்மைநிலை பற்றி ஆய்வு செய்திருந்தது.
யு.என்.ஐ.