For Quick Alerts
For Daily Alerts
Just In
"ஜாகிங் செய்த மாணவி மயங்கி விழுந்து சாவு
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துவரும் மாணவி உடற்பிற்சி செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இறந்தார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜெயராமனின் மகள் கலைவாணி (20). இவர் சிதம்பரம்அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உடற்பயிற்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் புதன்கிழமையன்று காலை உடற்பயிற்சிக்காக கல்லூரி மைதானத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர்மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்குச்செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
பிரேத பரிசோதனைக்குப் பின் இவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை நகர் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
Comments
Story first published: Friday, October 20, 2000, 5:30 [IST]