கவர்ச்சி நடிகை பாபிலோனா வீட்டில் ரூ. 6 லட்சம் கொள்ளை
சென்னை:
சினிமா கவர்ச்சி நடிகை பாபிலோனா வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவை கவர்ச்சிப் புயலால் கலக்குபவர் பாபிலோனா. தை பொறந்தாச்சு, உன்னைக் கொடு என்னைத் தருவேன்,புதுக்குடித்தனம், என் புருஷன் குழந்தை மாதிரி, வெற்றிக் கொடிக்கட்டு, என்னம்மா கண்ணு என்று ஏராளமான தமிழ் படங்களில்கவர்ச்சி நடிகையாக தோன்றி ரசிகர்கள் மனதில் ஸ்ட்ராங்காக இடம் பிடித்தவர்.
மலையாளப் படங்களிலும் படு கவர்ச்சியாக நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கைவசம் வைத்திருப்பவர்.
இவரது வீடு கே.கே.நகர் காமராஜர் சாலையில் ஒரு அபார்ட்மென்டில் உள்ளது. இவரது பாட்டி கிருஷ்ணகுமாரியும், தம்பிகள்சுகுமார், பாலு ஆகியோர் வசித்து வருகின்றனர்.
பாபிலோனாவின் அம்மா தேவியும், இன்னும் இரண்டு தம்பிகளும் விருகம்பாக்கத்தில் தனியாக வசிக்கின்றனர். கடந்த 17ம் தேதிதெலுஞ்கு படத்தில் நடிப்பதற்காக பாட்டியுடன் ஹைதராபாத் சென்று விட்டார் பாபி.
வீட்டில் இருந்த தம்பிகளும் அம்மா வீட்டுக்கு போய் விட்டனர். திரும்பி வந்த போது வீட்டு பின்புறக் கதவு திறந்து கிடந்தது.பாபியின் படுக்கையறை கதவும் திறந்து கிடந்தது. உள்ளே இருந்த பீரோவில் இருந்த 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள், பணம்கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.
ஆனால், பீரோ உடைக்கப்படவில்லை. இதுபற்றி படப்பிடிப்பில் இருந்த பாபிக்கு தம்பிகள் தகவல் கொடுத்தனர். அதிர்ந்து போனஅவர் உடனடியாக சென்னை திரும்பினார். போலீசில் புகார் செய்துள்ளார்.
விசாரணை நடந்து வருகிறது.