மேட்ச் பிக்ஸிங்: சிபிஐயின் இடைக்கால அறிக்கை தீபாவளியன்று மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுப் பிரிவின்(சிபிஐ) இடைக்கால அறிக்கை தீபாவளியன்று மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும்.
இத் தகவலை சிபிஐயின் செய்தித் தொடர்பாளர் எஸ்.எம். கான் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட்டில் சமீப காலமாக மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பலபேர் மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து இது குறித்துவிசாரணை நடத்தும்படி சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
கடந்த 6 மாதத்துக்கும் மேலாக பலரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.விசாரணையின் இடைக்கால அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கைதீபாவளியன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷாவிடம்ஒப்படைக்கப்படவுள்ளது.
இந் நிலையில், சிபிஐயின் இடைக்கால அறிக்கையில் 4 கிரிக்கெட் வீரர்களின்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்ட சிலர் மீதுகுற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்றும் கூறப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில்செய்தி வெளியாகின.
இச் செய்திகள் உண்மையல்ல. அவை எல்லாம் யூகத்தின் அடிப்படையில்எழுதப்பட்டுள்ளன. தீபாவளியன்றுதான் மத்திய அரசிடம் இடைக்கால அறிக்கைதாக்கல் செய்யப்படவுள்ளது என்றார் கான்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications