சென்னை சாப்ட்வேர் நிறுவனம் மீது வழக்கு
நியூயார்க்:
அமெரிக்காவில் உள்ள இந்திய சாப்ட்வேர் நிறுவனம், சென்னையில் உள்ள தனதுகூட்டு நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாகக் கூறி நஷ்ட ஈடு கேட்டு இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இது பற்றிக் கூறப்படுவதாவது:
அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் மாண்ட்வேல் என்ற இடத்தில் டேடா இன்க்., என்றசாப்ட்வேர் நிறுவனம் உள்ளது. இதன் தலைவராக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்அருண் வர்மா உள்ளார்.
டேடா இன்க் நிறுவனம், சென்னையில் உள்ள தனது கூட்டு நிறுவனமான போலாரிஸ்ரிசர்ச் லேப் என்ற சாப்ட்வேர் நிறுவனத்துடன் இந்த ஆண்டு மே 23-ம் தேதி ஒப்பந்தம்போட்டது. இதில் அருண் வர்மாவும், அருண் ஜெயினும் கையெழுத்திட்டனர்.
டேடா இன்க்., நிறுவனத்தின் பங்குகளை 3 ஆண்டுகளில் ரூ.97 கோடிக்கு வாங்கிக்கொள்வதாக அருண் ஜெயின் ஒப்பந்தம் செய்து கொண்டார். மேலும் அருண்வர்மாவை போலாரீஸ் நிறுவனத் தலைவராகவும் நியமிக்க அருண் ஜெயின் ஒப்புக்கொண்டார்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை அருண் ஜெயின் மீறிவிட்டார். இதனால், டேடா இன்க்நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி போலாரிஸ் நிறுவனம்மீது பெர்ஜென் கவுன்டி சுபீரியர் நீதிமன்றத்தில் டேடா இன்க்., நிறுவனம் சிவில்வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications