உலகளாவிய முஸ்லிம் ராணுவம் ..பாக். தீவிரவாத தலைவர் கூறுகிறார்

Subscribe to Oneindia Tamil

கராச்சி:

உலகளாவிய அளவில் முஸ்லிம் ராணுவத்தை ஏற்படுத்த முன் வரவேண்டும் என்றுபாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தாய்பா என்ற தீவிரவாத இயக்கம் அழைப்புவிடுத்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து கொண்டு இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் இந்த அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் மொகம்மது சயீத், கராச்சியில் நடைபெற்றஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:

கராச்சியில் சில நாட்களுக்கு முன்பு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் லஷ்கர்-இ-தாய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள். 30 பேருக்கு மேல்காயமடைந்தனர்.

இச் சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முஸ்லிம்களுக்கு எதிரானநடவடிக்கைகளை எதிர்த்து முஸ்லிம் நாடுகள் ஒன்று சேர்ந்து போராடவேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகள் ஒன்றுசேர்ந்து உலகளாவிய அளவில்முஸ்லிம் ராணுவத்தை உருவாக்கவேண்டும். இது தவிர, தங்களுக்கென தனி ஐக்கியநாடுகள் சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றையும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.

மேலும், முஸ்லிம் நாடுகள் தங்களுக்கிடையே பொதுவான கரன்சி முறையை கொண்டுவரவேண்டும். ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சேர்ந்து கொண்டு வந்துள்ள யூரோகரன்சியும், அமெரிக்க டாலரும் மதிப்பு அதிகமாக உள்ளபோது முஸ்லிம் நாடுகளும்அத்தகைய பொதுவான கரன்சியை உருவாக்கவேண்டும்.

கராச்சியில் நடந்த குண்டு வெடிப்புக்கு இந்திய பாதுகாப்புப் படையினர்தான் காரணம்.இதற்கு லஷ்கர் -இ-தாய்பா அமைப்பு நிச்சயம் பதிலடி கொடுக்கும்.

இந்துக்களும், ஸியோனிஸ்டுகளும் முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளனர்.ஆகவே, அவர்களுக்கு எதிராக காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டுமல்ல இஸ்ரேலுக்குச்சென்றும் பதிலடி கொடுக்க நாங்கள் தயங்கமாட்டோம் என்றார் ஹஃபீஸ் மொகம்மதுசயீத்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+