மீண்டும் ஒரு விமானக் கோளாறு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் மீண்டும் ஒரு விமானம் தொழில்நுட்பக் கோளாறுகாரணமாக பயணம் தள்ளிப் போடப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கும்,தொழில் நுட்பக் கோளாறுகளுக்கும் இடையேஉள்ள நெருக்கம் இன்னும் தொடர்கிறது.
சென்னை விமான நிலையத்திலிருந்து காலை சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் இந்த முறை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் தள்ளிப்போடப்பட்டது.
இந்த விமானம் மும்பையிலிருந்து சென்னை வழியாக சிங்கப்பூர் செல்ல வேண்டியது.மும்பையிலிருந்து சென்னை வந்ததும் விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருப்பதைபைலட் பார்த்துள்ளார். இதையடுத்து விமான நிலையத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டது.
இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டவுடன் மாலை 5 மணிக்கு விமானம் கிளம்பும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications