வைகோ - பாலசிங்கம் சந்திப்பு: த.மா.கா. கண்டனம்
சென்னை:
விடுதலைப் புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்தை, மதிமுக தலைவர் வைகோ சந்தித்தது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் கூறியுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர்களான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சென்னையில் செவ்வாய்க் கிழமை நிருபர்களிடம்பேசுகையில், புத்தாயிரம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக இந்திராகாந்தியை பி.பி.சி நிறுவனம் தேர்வு செய்து இருக்கிறது.
இதையொட்டி இந்திரா காந்தியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட சோனியாகாந்திக்கு த.மா.கா தலைவர் மூப்பனார் கடந்த பத்து நாட்களுக்குமுன்பு கடிதம் எழுதினார். சோனியாகாந்தி அதை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்து இருக்கிறார்.
த.மா.கா சார்பிலும், இந்திராகாந்தி பிறந்தநாள் நவம்பர் 19-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும். சமீபத்தில் மூப்பனார் டெல்லி சென்று இந்தவிழா சம்பந்தமாக சோனியா காந்தியிடம் நேரிலும் பேசியிருக்கிறார் என்றனர்.
பின்னர், நிருபர்கள் கேட்ட கேள்விக்கும் முன்னாள் அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
கேள்வி: அகில இந்திய அளவில் மூன்றாவது அணி ஏற்படுமா?
பதில்: மூன்றாவது அணி இன்னும் வடிவம் எடுக்கவில்லை. வடிவம் எடுத்த பிறகு பார்க்கலாம்.
கேள்வி: தமிழ்நாட்டில் அ.தி.மு.க தனித்து ஆட்சி அமைக்கும் என்று ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?
பதில்: சிதம்பரத்தில் நடந்த த.மா.கா செயற்குழுவில் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அ.தி.மு.க தனித்துஆட்சி என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இரண்டு தீர்மானங்களும் அப்படியே இருக்கிறது. தேர்தல் வரும் பொழுது அது பற்றி முடிவு செய்யப்படும்.
கேள்வி: ஐ.நா கூட்டத்திற்கு சென்ற வைகோ அங்கு பாலசிங்கத்தை சந்தித்து இருக்கிறாரே?
பதில்: ஐ.நா தூதுக் குழுவில் சென்ற வைகோ விடுதலைப்புலிகளை சந்தித்தது பற்றி மத்தியஅரசு விளக்கம் அளிக்கவேண்டும். விடுதலைப் புலிகளை ஆதரிப்பதுதேச விரோத செயல். விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் நடவடிக்கைகளை அரசு கண்காணிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications