For Daily Alerts
Just In
மதுரையில் தேவருக்கு நினைவு இல்லம்?
மதுரை:
மதுரை திருநகரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக ஆக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர்கருணாநிதி தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் திங்கள்கிழமை இரவு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 93 வது பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் தேவரின்படத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
மதுரை திருநகரில் தேவர் வாழ்ந்த இல்லத்தை அரசு நினைவு இல்லமாக ஆக்க வேண்டும் என்று விழாக்குழு அமைப்பாளர் டாக்டர் வீ.ராமகிருஷ்ணன்கோரினார். அதுகுறித்து நான் விசாரிப்பேன்.
அப்படி நினைவு இல்லமாக ஆக்கக்கூடிய வசதி, வாய்ப்பு இருந்தால் அதுபற்றி ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார் முதல்வர்.
Story first published: Tuesday, October 31, 2000, 5:30 [IST]