இலங்கையில் வன்முறை .. 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

மத்திய இலங்கையில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் 4 பேர் இறந்தனர். பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

மத்திய இலங்கையின் படுல்லா மாவட்டத்தில் பண்டாரவளே நகரில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 29 தமிழர்கள் சமீபத்தில்படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து இலங்கையிந் பல இடங்களில் தமிழர், சிங்களர்களுக்கிடையே கலவரம் மூண்டுள்ளது. மறுவாழ்வு முகாமில் இறந்தஒருவரது உடல் அவரது சொந்த ஊரான நுவரேலியாவில் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலம் நடந்த போது நுவரேலியாவில் கலவரம் நடந்தது. பல்வேறு அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டது. தற்போது, அங்குபோலீஸார், ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தின் பிடியில் நுவரேலியா:

இனக்கலவரத்தையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, இலங்கைப் பிரதமர் ரத்னசிரி விக்கிரமநாயகே அவசரக் கூட்டத்தைக்கூட்டி ஆலோசித்தார்.

நுவரேலியாவில் இனக்கலவரம் நடப்பதையறிந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் உள்பட அரசியல் தலைவர்கள்பலர், விரைந்து வந்து மக்களை சமாதானப்படுத்தினர்.

அங்கு அமைதி ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கு நிலையை பாதுகாக்கவும் அரசு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் மறுவாழ்வுமுகாமில் புலிகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், அதுகுறித்து விசாரணை நடத்தவும் அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.

அன்னான் கண்டனம்:

இதற்கிடையே, மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழர்கள் 29 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கோபிஅன்னான் கண்டனம் தெரிவித்துள்ளார். அங்கு அமைதியை உருவாக்க இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கைது:

ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யாக உள்ளவர் சந்திரசேகரன். கடந்த ஆண்டு வரை சந்திரிகா அமைச்சரவையில் துணையமைச்சராக இருந்தார். இலங்கைதொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவின் தலைவராக இருந்தார்.

கடந்த 99-ம் ஆண்டு இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். நாட்டு மக்கள் முன்னணி என்ற கட்சித் தலைவராகவும் உள்ளார். தமிழர்கள்படுகொலையைப் பயன்படுத்தி, பல இடங்களில் கலவரங்களை தூண்டிவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து பல இடங்களில் இனக்கலவரங்கள் வெடித்தன.

கலவர கும்பல், பஸ்களைத் தாக்கியது. ரயில்களுக்குத் தீ வைத்தது. இதையடுத்து சந்திரசேகரனைப் போலீஸார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+