தடா வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு .. கர்நாடகம் மெளனம்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் தடா கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தனதுதீர்ப்பை ஒத்திவைத்துள்ளது குறித்து கருத்து தெரிவிக்க கர்நாடகம் மறுத்துவிட்டது.
கடந்த சில நாட்களாக நடந்து வந்த கர்நாடக சட்டமேலவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை முடிவுற்றது. நவம்பர்7-ம் தேதி வரை சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபை ஒத்திவைக்கப்படுவதற்கு முன் தடா கைதிகள் விடுதலைகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதை பாஜக உறுப்பினர்கள் சபையில் எழுப்பினர்.
அதற்கு சட்ட அமைச்சர் டி.பி. சந்திரே கவுடா பதிலளித்தார். சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் 51 தடாகைதிகள் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இது குறித்து என்னசொல்வது என்று தெரியவில்லை.
தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அது பற்றி கருத்து தெரிவித்தால் அது நீதிமன்றஅவமதிப்புக்குள்ளாகிவிடும். வழக்கு இன்னும் நீதிமன்றத்தில்தான் உள்ளது. ஆகவே, தீர்ப்பு வரும் வரை எந்தகருத்தும் தெரிவிக்க முடியாது என்றார் அவர்.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, இவ் வழக்கு தொடர்பாக கர்நாடக அரசின் நிலைமையை கர்நாடக அரசுவழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டனர். இப்போது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்களையும், வழக்கறிஞர்கள்வாதிட்டதையும் தீர்ப்பின் ஒருபகுதியாகக் கருதக்கூடாது. தீர்ப்பு எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாதுஎன்றார் சந்திரே கவுடா.
இதற்கிடையே, வீரப்பன் விவகாரத்தில் கர்நாடக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை சபையில்தெரிவிக்கவேண்டும் என்று பாஜக அவைத் தலைவர் டி.எச். சங்கரமூர்த்தியும், பி.எஸ். எடியூரப்பாவும் கோரினர்.
ராஜ்குமார் கடத்திச் செல்லப்பட்டு 93 நாள்கள் ஆகிவிட்டன. ஆகவே, கர்நாடக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைமற்று முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா தானாக முன் வந்து அறிக்கை வெளியிடவேண்டும். மக்களும் அதுபற்றிதெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளனர் என்று அவர்கள் கேட்டுக் காண்டனர்.
கர்நாடக உதயமான நாள் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆனால், கர்நாடகத்தின் தலைசிறந்த நடிகர்கடத்தல்காரனிடன் பிணைக் கைதியாக உள்ளார். ராஜ்குமார் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.
இந் நிலையில், தனது அடுத்த கட்ட நடவடிக்கைக்காக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறதுகர்நாடக அரசு. ராஜ்குமாரை மீட்க தூதர்கள் மீண்டும் அனுப்பப்படுவார்களா என்பதை கர்நாடக அரசுதெரிவிக்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே, தடா கைதிகள் விடுதலை தொடர்பான வழக்கில உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளநிலையில், அது பற்றி சட்ட மேலவையில் விவாதிப்பது சரியல்ல. விவாதத்தின்போது இரு மாநில அரசுகளையும்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது என்பது உண்மைதான். ஆனால், தீர்ப்பு வேறு விதமாகவும் இருக்கலாம் என்றுஐக்கிய ஜனதா தள உறுப்பினர் எம்.பி. பிரகாஷ், ஜனதா தள உறுப்பினர் பி.எல். சங்கர் இருவரும் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications