முறையாக விடுதலையாக விரும்புகிறோம் .. வீரப்பனுக்கு தடா கைதிகள் கடிதம்
பெங்களூர்:
வீரப்பன் நிபந்தனைக்காக தங்களுக்கு விடுதலை கிடைப்பதை தமிழக, கர்நாடக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தடா கைதிகள் விரும்பவில்லை.மேலும் நீதி விசாரணைக்குப் பிறகு முறையாக விடுதலை கிடைத்தால் போதும் என்று அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சாரா கோவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் தமிழக, கர்நாடக சிறைகளில்அடைக்கப்பட்டுள்ள தடா கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்துள்ளார்.
ஆனால், வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட கர்நாடக எஸ்.ஐ.ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்ததையடுத்து, தடா கைதிகள் விடுவிப்பில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இதற்கிடையே வீரப்பன் கோரிக்கைப்படி, விடுதலையை எதிர்பார்த்த கைதிகள், தற்போது ஏற்பட்டுள்ளசட்ட சிக்கல்களினால் விரக்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மைசூர் சிறையில் இருக்கும் 51 தடா கைதிகள் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்குப் பின்னர், விடுதலை பெறுவதையே விரும்புகிறோம்.எந்த நிபந்தனைப்படியும் எங்களுக்கு விடுதலை வேண்டாம். எங்களுக்காக ராஜ்குமாரை காட்டில் சிறை வைக்க வேண்டாம் என்று வீரப்பனுக்குக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நேர்மையான முறையில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் வீரப்பன் தனது கோரிக்கைகளில் இருந்து பின்வாங்கவேண்டும் என்று தடா கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கைதிகள் 51 பேரும் வீரப்பனுக்குத் தனித்தனியாகக் கடிதம்எழுதியுள்ளனர்.
அக்கடிதத்தில் நடிகர் ராஜ்குமார் விடுதலைக்கு மாற்றாக எங்களை விடுதலை செய்தால், இப்பிரச்சனை ஓய்ந்தபின் மீண்டும் சட்டம் எங்கள் மீது பாயாதுஎன்பதற்கு என்ன ஆதாரம்? அதனால் நேர்மையான முறையில் விடுதலையடைவதையே நாங்கள் விரும்புகிறோம் என்று தடா கைதிகள் அக்கடிதங்களில்குறிப்பிட்டுள்ளனர்.
இக்கடிதங்கள் தடா கைதிகளின் வக்கீல் வேணுகோபாலிடம் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் இவற்றை சென்னைக்கு அனுப்பியுள்ளார். அடுத்த முறைகாட்டுக்குச் செல்லும் கோபால் அல்லது பழ.நெடுமாறன் மூலமாக இக்கடிதங்கள் வீரப்பனிடம் கொடுக்கப்படும் என்றார் சாரா கோவிந்த்.












Click it and Unblock the Notifications